‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
இந்திய சினிமாவில் முதன்முறையாக வசூலில் நூறு கோடி கிளப்பை உருவாக்கியவர்கள் பாலிவுட்டின் சக்கரவர்த்திகளாக விளங்கும் மூன்று கான் நடிகர்கள் தான். இவர்கள் மூவருக்கும் கடுமையான போட்டி இருந்தாலும், தங்களுக்குள்ளேயே மாறி மாறி இந்த வசூல் விஷயத்தில் நம்பர் ஒன் இடத்தை தக்கவைத்து வந்தார்களே தவிர வேறு யாரையும் அருகில் நெருங்கவிடவில்லை.. ஆனால் பாகுபலி படத்தின் வசூல் சாதனை இவர்களது ஈகோவுக்கு சரியான சம்மட்டி அடி கொடுத்தது.
சில மாதங்களுக்கு முன் வெளியான 'பாகுபலி-2' படத்தின் வசூல் பாலிவுட்காரர்களை மிரள வைத்தது.. இப்படிப்பட்ட படம் ஒன்றை எப்படி எடுத்திருக்கிறார்கள் என ஆவலோடு பார்ப்பது தானே முறையாக இருக்கும். ஆனால் இந்த விஷயத்தில் ஷாருக், சல்மான், ஆமீர் என மூன்று கான் நடிகர்களுமே சொல்லி வைத்தாற்போல பாகுபலி-2வை பாராட்டுவதோடு நின்றுவிட்டார்கள். ஒருவர் கூட இந்தப்படத்தை இன்னும் பார்க்கவில்லை. பார்க்க முன்வரவும் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.
சமீபத்தில் பாகுபலி-2 பற்றிய கேள்விக்கு பதிலளித்த ஆமீர்கான், “பாகுபலி-2'வின் வெற்றி எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தவிர எங்களது பாலிவுட் சினிமாவின் சாத்தியம் என்ன என்பதையும் எங்களுக்கு உணர்த்தியிருக்கிறது. எல்லா மொழிகளிலும் தடைகளை உடைத்திருக்கிறது.. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்னும் இந்தப்படத்தை பார்ப்பதற்கு எனக்கு நேரம் கிடைக்கவில்லை” என கூறியுள்ளார். ஷாருக்கானும் சல்மான் காணும் இதேபோல 'பாகுபலி-2' படத்தை பாராட்டினாலும் அவர்களும் இன்னும் இந்தப்படத்தை பார்க்கவில்லை என்றே சொல்லப்படுகிறது.