ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரதமர் நரேந்திர மோடியின் முக்கியமான திட்டங்களில் ஒன்றான தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தும் விதமாக பாலிவுட்டில் ஏக் பிரேம் கதா என்ற படம் உருவாகி உள்ளது. அக்ஷ்ய் குமார், பூமி பட்னிகர் முக்கிய ரோலில் நடித்திருக்கின்றனர். ஸ்ரீ நாராயணன் சிங் இயக்கியுள்ளார். இப்படம் முடிந்து ரிலீஸ்க்கு தயாராகி வருவதால் புரொமோஷன் வேலைகளில் பிஸியாக உள்ளனர் படக்குழுவினர்.
சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த பூமி பட்னிகரிடம் சினிமாவில் சிபாரிசு குறித்து கேட்டபோது, அவர் கூறியதாவது... "என்னுடைய சினிமா வாழ்க்கையில் சிபாரிசுக்கு வேலை இல்லை என்று தான் சொல்வேன். எனக்கு எந்த சினிமா பின்புலமும் கிடையாது, என் குடும்பத்தார் யாரும் சினிமாவில் கிடையாது. வாய்ப்பு கிடைத்ததால் படங்களில் நடிக்கிறேன். என்னைப்போன்று வாணி கபூர், ரன்வீர் சிங், அனுஷ்கா சர்மா போன்றோரும் எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் வந்தவர்கள். சினிமாவில் சிபாரிசு என்பது இல்லை என்று நான் சொல்ல மாட்டேன், இருக்கிறது, ஆனால் எனக்கு அப்படி ஒரு சந்தர்ப்பம் எதுவும் நடக்கவில்லை" என்கிறார்.