'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
பிஆர் ஸ்டுடியோ தயாரிப்பில், அஸ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பரேலி கி பார்பி. ஆயுஸ்மான் குராணா, கிர்த்தி சனோன் மற்றும் ராஜ்குமார் ராவ் முக்கிய ரோலில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. அப்போது பேசிய ஆயுஸ்மானிடம், உங்களது மேரி பியாரி பிந்து படம் தோல்வியடைந்தது ஏன் என்று செய்தியாளர்களிடம் கேட்டனர்.
இதற்கு பதிலளித்த ஆயுஸ்மான், "மேரி பியாரி பிந்து படத்திற்கு இரண்டு விதமான விமர்சனங்கள் எழுந்தன. சிலருக்கு படம் பிடித்திருந்தது, சிலருக்கு பிடிக்கவில்லை. மேலும் என்னுடைய ரிலீஸான நேரத்தில் பாகுபலி-2 படமும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. அதனால் எனது படம் தோல்வியடைந்தது. ஒருவேளை பாகுபலி-2 ரிலீஸாகமால் இருந்தால் என் படம் நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும்" என்றார்.
பரேலி கி பார்பி படம் வருகிற ஆகஸ்ட் 18-ம் தேதி ரிலீஸாக உள்ளது.