தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இந்தியில் தொடர்ச்சியாக படங்கள் இயக்கிய வந்த பிரபுதேவாவுக்கு சில படங்கள் அதிர்ச்சி தோல்வி கொடுக்கவே அங்கிருந்து இடம்பெயர்ந்து மறுபடியும் கோலிவுட்டுக்கு வந்து நடிகராகி விட்டார். அந்த வகையில், தேவி படத்திற்கு பிறகு யங் மங் சங், மெர்லின், குலேபகாவலி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அடுத்தபடியாக விஷால், கார்த்தியை நாயகர்களாக வைத்து கறுப்பு ராஜா வெள்ளை ராஜா படத்தை இயக்குகிறார்.
மேலும், தற்போது கொலையுதிர் காலம் படத்தின் இந்தி பதிப்பில் தேவி படத்தைத் தொடர்ந்து மீண்டும் தமன்னாவுடன் இணைந்து நடித்து வருகிறார் பிரபுதேவா. கமோஷி என்ற அந்த படத்தில் பாகுபலி நாயகன் பிரபாஸ் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். இதற்கு முன்பு இந்தியில் பிரபுதேவா இயக்கிய ஆக்சன் ஜாக்சன் படத்திலும் நட்புக்காக ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார் பிரபாஸ்.
இந்த நிலையில், ஏற்கனவே தெலுங்கில் சில படங்களை இயக்கியுள்ள பிரபு தேவா, அடுத்து ஒரு நேரடி தெலுங்கு படத்தை இயக்குகிறார். அந்த படத்தில் பிரபாஸ் நாயகனாக நடிக்க வைக்கிறாராம். ஆக, பிரபுதேவா படத்தில் மூன்றாவது முறையாக நடிக்கப்போகிறார் பிரபாஸ்.