'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
உலகம் முழுவதும் பல நாடுகளில் ஏப்ரல் 28ம் தேதி வெளியான 'பாகுபலி 2' திரைப்படம் 60 நாட்களை கடந்தும் இந்தியாவில் பல தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. சுமார் 1700 கோடி ரூபாய் வரை உலக அளவில் வசூலித்துள்ள இந்தப் படம், தற்போது அடுத்த உலக வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டது. அந்த வரிசையில் இன்று தைவான் நாட்டில் சுமார் 15 இடங்களில் இப்படம் வெளியாகியுள்ளது. இன்றிலிருந்து அடுத்த வாரம் 6ம் தேதி வரையில் சுமார் 168 காட்சிகள் இப்படம் திரையிடப்பட உள்ளது.
இன்று காலை படத்தின் முதல் காட்சியில் படத்தைப் பார்த்த ரசிகர்கள் வெகுவாகப் பாராட்டினார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய திரையுலகில் 'பாகுபலி 2' படம் மிகப் பிரம்மாண்டமான படம் என அவர்கள் கூறியிருக்கிறார்கள். தைவான் நாட்டில் 'பாகுபலி 2' படம் வெற்றி பெற்றால் அடுத்து சீனா நாட்டில் செப்டம்பர் மாதம் வெளியாகும் போது கண்டிப்பாக வெற்றி பெறும். இரு நாட்டு மக்களின் கலாச்சாரம் ஏறக்குறைய ஒன்றுதான், ரசனையும் ஒன்றுதான்.
'தங்கல்' படம் சீனாவில் 1000 கோடி வசூலைத் தாண்டி மொத்தமாக 2000 கோடி வசூலைக் கடந்துள்ளது. அந்த சாதனையை 'பாகுபலி 2' முறியடிக்க வேண்டுமென்றால் சீனாவில் வெளியாகும் போது அதிகமாக வசூலிக்க வேண்டும். அதற்கு இன்றைய தைவான் நாட்டில் வெளியானதன் ரிசல்ட் மிகவும் அவசியமான ஒன்று.