பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களில் அக்சய்குமாரும் ஒருவர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி ரீமேக்கான ஹாலிடே இந்தி படத்தில் நடித்த அவர், தற்போது ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 2.ஓ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். மேலும், டாய்லெட்-ஏக் பிரேம் கதா, பேடுமேன் போன்ற இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.
மேலும், இதற்கு முன்பு பெரும்பாலும் ஆக்சன் மற்றும் ரொமாண்டிக் படங்களாக நடித்து வந்த அக்சய்குமார், சமீபகாலமாக சமூக நோக்கமுள்ள கதைகளை தேடிப்பிடித்து நடித்து வருகிறார். தற்போது அவர் இந்தியில் நடித்து வரும் டாய் லெட்- ஏக் பிரேம கதா, பேடுமேன் போன்ற படங்கள் சமூக நோக்கமுள்ள கதைகளில்தான் உருவாகி வருகிறது. குறிப்பாக, பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தும் வகையில் டாய்லெட் ஏக் பிரேம்கதா படம் உருவாகிறது.
இந்தநிலையில் அடுத்தபடியாக பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் ஒரு படத்திலும் அக்சய்குமார் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சினிமாவில் பல பிரபலங்களும் பிரதமரின் வாழ்க்கை கதையில் நடிப்பதற்கு அக்சய்குமாரே பொருத்தமானவர் என்று கருத்து கூறி வருகின்றனர்.
இதுகுறித்து இந்தி நடிகர் சத்ருகன் சின்ஹா விடுத்துள்ள செய்தியில், பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தை ஆதரிப்பவர் அக்சய்குமார். அவரிடமும் நல்ல சமூக நோக்கம் உள்ளது. அதன்காரணமாகவே டாய்லெட் -ஏக் பிரேம கதா படத்தில் நடித்து வருகிறார். மேலும், பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு கதையில் அவரது வேடத்தில் நடிக்கவும் அக்சய்குமார் மிக பொருத்தமாக இருப்பார் என்று தெரிவித்துள்ளார்.