டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சட்ட விரோதமாக, அனுமதியின்றி கட்டப்பட்ட, பிரபல பாலிவுட் நடிகர் அர்ஷத் வார்சியின் பங்களாவை, மும்பை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து தள்ளினர்.
பிரபல பாலிவுட் நடிகர் அர்ஷத் வார்சி, 49; லகே ரஹோ முன்னாபாய், முன்னாபாய் எம்.பி.பி.எஸ்., உட்பட, பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து உள்ளார். மும்பை வெர்சோவா பகுதியில், ஏர் - இந்தியா நிறுவன ஊழியர் ஒருவரிடமிருந்து, ஒரு பங்களாவை சமீபத்தில், வார்சி வாங்கினார். இந்த பங்களாவை புதுப்பிக்க முடிவு செய்தார். அப்போது, மாநகராட்சியின் அனுமதியின்றி, விரிவுபடுத்தி கட்டினார். இது குறித்து, ஏர் - இந்தியா கூட்டுறவு வீட்டு வசதி சங்கம், மும்பை மாநகராட்சியில் புகார் செய்தது.
இது பற்றி விசாரித்த மாநகராட்சி நிர்வாகம், அனுமதியின்றி கட்டப்பட்ட பகுதிகளை இடிக்க முடிவு செய்தது. வார்சியின் பங்களாவை இடிக்க, புல்டோசருடன், அதிகாரிகள் சென்றனர்; ஆனால், வீட்டில் யாரும் இல்லை; வீடும் பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து, அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடத்தின் ஒரு பகுதியை, அதிகாரிகள் இடித்தனர்.
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், வீட்டில், நடிகர் வார்சி இல்லாததால், ஒரு பகுதியை மட்டும் இடித்தோம். மற்ற பகுதிகள், விரைவில் இடிக்கப்படும் என்றார்.