ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ராக் ஆன், கை போ சே, பிட்டூர், போன்ற படங்களை இயக்கியவர் அபிஷேக் கபூர். இவர் அடுத்தப்படியாக ஒரு காதல் கதையை இயக்க உள்ளார். இதில் சுஷாந்த் சில் ராஜ்புட் ஹீரோவாக நடிக்க உள்ளார். படத்தில் ஹீரோயினாக நடிகர் சைப் அலிகானின் மகள் சாரா அலிகான் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சைப் மற்றும் சாரா இருவரிடமும் அபிஷேக் பேசியிருக்கிறார். கதை பிடித்ததால் தன் மகளை இப்படத்தில் நடிக்க வைக்க உள்ளாராம் சைப். பாலாஜி மோசன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்க உள்ளார்கள். இன்னும் பெயரிடப்படாத இப்படம் அடுத்தாண்டு துவங்க உள்ளது. தற்போது படப்பிடிப்பிற்கு முந்தைய பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனிடையே சாரா அலிகான் ஸ்டூடண்ட் ஆப் தி இயர்-2 படத்திலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆகையால் சாராவின் முதல்படம் எதுவாக இருக்க போகிறது என்ற ஆவல் பாலிவுட்டில் எழுந்துள்ளது.