பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
சிறைவாசத்திற்கு பிறகு சஞ்சய் தத் நடித்துள்ள முதல் படம் பூமி. ஓமங் குமார் இயக்கியுள்ளார். அப்பா - மகள் உறவை சொல்லும் பாசப்படமாக இந்த பூமி உருவாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் பூமி படத்தின் ஷூட்டிங் ஆரம்பமானது. இதில் சஞ்சய் தத் தனது ரோல் சம்பந்தப்பட்ட ஷூட்டிங்கை ஒரே மூச்சாக முடித்து கொடுத்துள்ளார். படத்தின் கடைசிநாள் ஷூட்டிங்கின் போது மிகவும் உணர்ச்சிகரமாக காணப்பட்டார்.
இதுகுறித்து பூமி படத்தை தயாரிக்கும் பூஷண் குமார் கூறியிருப்பதாவது... "பூமி படத்திற்காக சஞ்சய் தத் தன் ரோலை அவ்வளவு சிறப்பாக வடிவமைத்து கொண்டார். படத்திற்காக அவர் உழைத்த விதம், அவர் எடுத்த முயற்சிகள் அனைத்தையும் பார்த்து நான் மகிழ்ச்சி அடைந்தேன்" என்றார்.
சஞ்சய் தத் கூறும்போது... "படம் ஆரம்பித்த முதல்நாள் முதல் கடைசி நாள் சிறப்பான அனுபவமாக, நல்ல பயணமாக இருந்தது. படத்தை திரையில் காண ஆவலாய் இருக்கிறேன்" என்கிறார்.
பூமி படம் வருகிற செப்., 22-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.