பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகை பரினீதி சோப்ரா, தனது புதிய படமான கோல்மால் அகைன் படத்தின் புரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கோல்மால் அகைன் படம் பற்றிய பேசிய பரினீதி சோப்ரா, கோல்மால் அகைன் பட சூட்டிங்கின் போது மிகவும் சந்தோஷமாக இருந்தோம். இதுவரை நான் பார்த்ததிலேயே சிறந்த படக்குழு இது. ரோஹித் மற்றும் கோல்மால் ஒட்டுமொத்த குழுவும் வெறும் பைத்தியம் என்று தான் கூற வேண்டும். இது மிகப் பெரிய படம்.
அதனால் ஒட்டுமொத்த படக்குழுவும் குடும்பத்துடன் இருப்பது போன்று ஜாலியாக இருந்தோம். கோல்மால் ஒரு சகாப்த தொடர் படம் என்றே கூறலாம். கரீனா முதல் 2 பாகங்களில் நடித்துள்ளார். தற்போது நானும் இப்படத்தில் நடிக்கிறேன். இது எனக்கு கிடைத்த பெருமையாகவே நான் நினைக்கிறேன். இதில் ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் வகையிலான விஷயங்கள் நிறைய உள்ளது. ஏனெனில் இது நகைச்சுவை படம் என்றார். பரினீதி சோப்ரா நடிக்கும் அடுத்த படமான மேரி பியார் பிந்து, இந்த ஆண்டு மே 12 ம் தேதி ரிலீசாக உள்ளது.