'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட்டின் பிரபல நட்சத்திர தம்பதியர்களான கரீனா கபூர் - சைப் அலி கான் ஜோடிக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. மகனுக்கு தைமூர் அலிகான் என்று பெயர் வைத்துள்ளார். சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பங்கேற்ற சைப் அலி கான், தனது மகனை பற்றி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது...."எனக்கும், கரீனாவுக்கும் தைமூரை எப்படி வளர்ப்பது என்று தெரியவில்லை. அது கொஞ்சம் சிரமமான ஒன்று தான். என் மகனை மிகவும் பண்புள்ள மனிதராக வளர்க்க வேண்டும், ஏன்னெறால் அனைவரின் பார்வையும் அவன் மீது தான் இருக்கும். நிச்சயம் தைமூர் சிறந்த மகனாக, மனிதனாக வருவான் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.
சைப் அலிகான் தற்போது நடித்து ‛செஃப்' என்ற படத்தில் நடிக்கிறார். இப்படம் வருகிற ஜூலை மாதம் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது.