ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பெரும்பாலும் பாலிவுட் நட்சத்திரங்கள் தங்களின் காதல் வாழ்க்கை பற்றி பேசுவதில்லை. ஆனால் தான் காதல் வாழ்க்கையை பற்றி பேசாததற்கு என்ன காரணம் என நடிகர் வருண் தவான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார். எனது காதலி நடஷா பற்றி நான் பேசாமல் இருப்பதற்கு ஒரே காரணம், எங்களுக்குள் இருக்கும் உறவை நான் செய்தியாக்க விரும்பவில்லை என்பது மட்டுமே. நான் மட்டுமல்ல எந்த நடிகரும் அதை விரும்ப மாட்டார்கள் என நினைக்கிறேன். எனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி நிறைய கூற வேண்டும் அல்லது விளக்க வேண்டும் என்ற எண்ணம் அல்லத அதற்கான சந்தர்ப்பம் ஏற்படும் போது, நான் அது பற்றி சொல்லுவேன் என்றார். வருண் தவான் தற்போது பத்ரிநாத் கி துல்கனியா படத்தில் நடித்து வருகிறார். இப்படம், இந்த ஆண்டு மார்ச் 10 ம் தேதி ரிலீசாக உள்ளது.