சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
சஞ்சய் தத் வாழ்க்கையை அவரது நண்பரும், இயக்குநருமான ராஜ்குமார் ஹிரானி, படமாக இயக்கி வருகிறார். இதில் சஞ்சய் தத்தாக ரன்பீர் நடிக்கிறார். ரன்பீருடன் மனீஷா கொய்ராலா, பரேஷ் ராவல், விக்கி கவுசல், அனுஷ்கா சர்மா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சமீபத்தில் இதன் படப்பிடிப்புகள் ஆரம்பமாகின.
சஞ்சய் தத்தின் வாழ்க்கையில் அவர் சிறை சென்ற சம்பவமும் முக்கியமானது. புனே, எரவாடா சிறையில் தான் அவர் அடைக்கப்பட்டிருந்தார். இதற்காக பிரத்யேக சிறை செட்டை உருவாக்க இயக்குநர் ராஜ்குமார் முதலில் எண்ணினார். ஆனால் தயாரிப்பாளர் நிகில் அத்வானி இயக்கும் லக்னோ சென்ட்ரல் என்ற படத்தில் ஒரு பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. இதையே சிறை போன்று சற்று மாற்றி தனது படத்தை இயக்க ராஜ்குமார் எண்ணினார். அதன்படி அவரும், நிகில் அத்வானியிடம் அனுமதி கேட்டிருக்கிறார். நிகில் சம்மதம் சொல்ல இப்போது புனே எரவாடா சிறை போன்ற மாதிரி செட், லக்னோ சென்ட்ரல் செட்டில் அமைக்கப்பட்டு சஞ்சய் தத்தின் சிறைக்காட்சி படமாக்கப்பட இருக்கிறது.
சஞ்சய் தத் வாழ்க்கை படம் வருகிற கிறிஸ்துமஸ் நாளில் ரிலீஸாக இருக்கிறது.