ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? | நாளைய படங்களின் வெளியீட்டில் ஒரு அபூர்வம் | மீண்டும் தமிழுக்கு வரும் சமந்தா |
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப்படங்கள் சிலவற்றில் நடித்த நடிகை யாமி கவுதம், இப்போது பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது அவர் ஹிருத்திக் ரோஷன் உடன் காபில் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் பற்றியும், தனது சினிமா அனுபவம் பற்றியும் நம்மோடு அவர் பகிர்ந்து கொண்டதாவது...
காபில் படத்தில் நடிக்க காரணம் என்ன...?
நிறைய காரணங்கள் உள்ளது. ஒன்று படத்தின் கதை, மற்றொன்று ராகேஷ் ரோஷ். ஏனென்றால் அவர் மிகவும் மதிப்பிற்குரியவர், மூன்றாவது நடிகர் ஹிருத்திக் ரோஷன் மற்றும் இயக்குநர் சஞ்சய் குப்தா. இந்த மூன்றும் தான் என்னை காபில் படத்தில் நடிக்க வைத்தது.
காபில்-க்காக உங்களை எப்படி தயார் செய்தீர்கள்...?
படத்தின் கதையை சொல்லும்போதே நான் பார்வையற்றவராக நடிக்கிறேன் என்று இயக்குநர் சொல்லிவிட்டார். அதற்காக என்னை தயார் செய்ய நிறைய பார்வையற்றவர்கள் நடித்த படங்களை பார்த்தேன். மேலும் பார்வையற்றவர்கள் சிலரையும் சந்தித்து அவர்கள் எப்படி தங்களது அன்றாட வாழ்க்கையை நகருத்துகிறார்கள் என்பதையும் தெரிந்து கொண்டேன். படத்தில் எனது கேரக்டர் பெயர் சுப்ரியா. நான் பார்வையற்றவராக நடித்தாலும் சுதந்திரமாக எங்கும் பயணிக்கும் தன்மை உடையது எனது கேரக்டர்.
ஹிருத்திக் உடன் நடித்த அனுபவம் பற்றி சொல்லுங்க...?
வியக்கத்தக்க நடிகர் ஹிருத்திக் ரோஷன். இதற்கு முன் தான் நடித்திராத கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார். படத்திற்கு படம் வித்தியாசம் காட்டுபவர். அவருடன் வேலை பார்த்தது என்றும் நினைவில் இருக்கும். பிறரின் யோசனைகளுக்கு மதிப்பளிப்பவர். தன்னுடைய வேலையில் அதிக ஈடுபாட்டுடன் இருப்பவர், அனைவருக்கும் ஒரு உந்துதலாகவும், எளிமையாகவும், பிறருக்கு உதவும் தன்மை உடையவராகவும் அவர் இருப்பார்.
ஹிருத்திக் ரோஷன் உடன் நடித்த பிறகு பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறதா...?
ஹிருத்திக் ரோஷன் படத்திற்கு முன்பே பெரிய நடிகர்களின் படத்தில் நடித்தேன். அஜய் தேவ்கன் உடன் ஆக்ஷ்ன் ஜாக்சன் என்ற படத்தில் நடித்தேன், ஆனால் அந்தப்படம் தோல்வியை தழுவியது. தற்போது சர்கார்-3 படத்தில் அமிதாப் பச்சன் உடன் நடிக்கிறேன். ஆகையால் காபில் படத்திற்கு பிறகு பெரிய நடிகர் வாய்ப்பு வந்தது என்று சொல்லாதீர்கள். என்னை பொறுத்தமட்டில் நான் என்றும் பெரிய நடிகர்களின் படம் என்று படத்தை தேர்வு செய்வது கிடையாது, கதைக்கு தான் முக்கியத்துவம் தருகிறேன், கதை பிடித்திருந்தால் நடிக்கிறேன்.
சர்கார்-3 படம் பற்றி சொல்லுங்க...?
சர்கார்-3-யில் அனு என்ற ரோலில் நடிக்கிறேன். என் தந்தையை கொல்ல முக்கிய காரணமாக இருந்த அமிதாப்பை பழிவாங்க துடிக்கும் கேரக்டர் என்னுடையது. முதன்முறையாக துப்பாக்கி எல்லாம் பிடித்து நெகட்டீவ் மாதிரியான ரோலில் நடிக்கிறேன். பிப்ரவரியில் படப்பிடிப்பு முடிகிறது, அடுத்தமாதமே படம் ரிலீஸாகிறது.
இந்தமாதிரி ஒரு கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று ஏதாவது ஆசை உண்டா...?
பொதுவாக எந்த ஒரு கேரக்டரையும் நான் தேர்வு செய்வது கிடையாது, அது இயக்குநர்களின் கையில் தான் உள்ளது. ஆனால் எனக்கு வித்தியாசமான கேரக்டரில் நடிக்கும் ஆசை இருக்கிறது. குறிப்பாக வாரியர் பிரின்சஸ் கேரக்டர் மற்றும் பெண்களை மையப்படுத்தி உருவாகும் கேரக்டரில் நடிக்க ஆசை.