தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஓம் புரியாக நடிக்க என்னை விட யாரும் சிறந்தவர்கள் இருக்க முடியாது என்று நடிகர் மனோஜ் பாஜ்பாய் கூறியுள்ளார். பாலிவுட்டின் பிரபல நடிகரான ஓம் புரி சமீபத்தில் இறந்தார். இவரது மரணத்தில் சந்தேகம் இருந்து வருகிறது. இந்நிலையில் ஓம் புரியின் மறைவுக்கு மும்பையில் இரங்கல் கூட்டம் நடந்தது. இதில் நடிகர் மனோஜ் பாஜ்பாயும் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது... ‛‛ஓம் புரியுடன் நெருங்கி பழகியவன் என்ற முறையில் சொல்கிறேன், அருடைய ரோலில் என்னை விட யாரும் சிறந்து நடிக்க முடியாது. அவரைப்பற்றி படம் எடுத்தால் அதில் நான் நடிப்பேன். அவரின் இரங்கல் கூடத்தில் பங்கேற்றது மகிழ்ச்சி. அவரைப்பார்த்தாலே ஒருவர் மனதில் உள்ள அழுத்தம் எல்லாம் குறைந்துவிடும், அந்தளவுக்கு எல்லோரிடத்திலும் எளிமையாகவும், அன்பாகவும் பேசக்கூடியவர். சிறு கிராமத்திலிருந்து வந்து பெரிய நடிகனாக வர வேண்டும் என்று கனவோடு இருப்பவர்களுக்கு ஓம் புரி ஒரு முன்னுதாரணம்'' என்று கூறியுள்ளார்.