அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' |
நடிகர் சல்மான் கானுடன் திருமணம் நடக்க போவதாக வெளியாகி வந்த தகவல்கள் குறித்து லுலியா வென்சர் முதல் முறையாக மவுனம் கலைத்து பதிலளித்துள்ளார். ஹிமேஷ் ரேஸ்ஸாமியாவின் சமீபத்திய ஆல்பமான ஆப் சி மவுசிகு என்ற ஆல்பத்தில் எவ்ரி நைட் அன் டே என்ற பாடலை லுலியா பாடி உள்ளார். இந்தியில் தான் முதல் முறையாக பாடிய இந்த பாடலின் வெளியிட்டு விழாவில் லுலியா நேற்று கலந்து கொண்டார். அப்போது, சல்மான் கானுக்கும், அவருக்கும் இடையேயான உறவு பற்றி பத்திரிக்கையாளர்கள் கேட்டனர். அப்போது பதிலளித்த லுலியா, சல்மான் மற்றும் என்னை பற்றி ஏராளமான செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஒவ்வொரு மீடியாவும் இதை திரும்ப திரும்ப கூறி கொண்டே இருக்கின்றன. ஆனால் நான் சொல்கிறேன், அவர் எனக்கு ஒரு நல்ல நண்பர் மட்டுமே. அதைத் தவிர வேறு என்ன நான் சொல்ல? அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஏனெனில் நான் இந்தியா வருவதற்கு அவர் தான் காரணம். எனக்கு இந்தியா, அதன் கலாச்சாரம் மிகவும் பிடிக்கும். நான் முதல் முறையாக இந்தியா வந்து விட்டு திரும்பும் போது அழுதேன் என்றார்.