'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
ஹிந்தி திரையுலகில் முன்னணியில் இருக்கும் இளம் ஹீரோயின்களில் அனுஷ்கா சர்மாவும் ஒருவர். இயக்குநர் கரண் ஜோகர் இயக்கத்தில் அனுஷ்கா, ரன்பீர் கபூர், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து இன்று வெளியாகியுள்ள படம் ‛ஏ தில் ஹே முஷ்கில்'. சமீபத்தில் இப்படத்திற்காக நடந்த புரொமோஷன் நிகழ்ச்சியில், கரண் ஜோகர் போன்று ஒரு இயக்குநருடன் பணியாற்றும் போது என்னை தனிப்பட்டு யாரும் கவனிக்கும் படி செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளார்.
இதைப்பற்றி அனுஷ்கா கூறியதாவது.... "நடிப்பில் ஆர்வம் காட்டுவதால் என்னை நான் மிகவும் கவனித்து கொள்ள மாட்டேன். அதிலும் கரணுடன் பணியாற்றும் போது நடிப்பில் மட்டும் தான் அதிக கவனம் இருக்கும், அப்போது தான் படத்தில் நம்முடைய நடிப்பு சிறப்பானதாக இருக்கும். படத்தில் நம்மை அவ்வளவு அழகாக காட்டிவிடுவார் கரண், இப்படியொரு சூழலில் என்னை யாரும் கவனிக்கும்படி நான் என்னை பிரதிபலிக்க மாட்டேன்" என்றார்.