இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
பாலிவுட்டின் பிரபல நடிகை கரீனா கபூர். ஐஸ்வர்யா ராய் போன்று இவரும் திருமணம் ஆன பின்னர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது கரீனா கர்ப்பமாக இருப்பதால் படங்களில் நடிக்காமல் உள்ளார். டிசம்பர் மாதம் அவருக்கு குழந்தை பிறக்க உள்ளது. குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே கரீனா நடிப்பை தொடர இருக்கிறார்.
இவர் அடுத்தப்படியாக ‛வீரே தி ஷாதி' படத்தில் நடிக்கிறார். இப்படத்தை சஷாங் கோஷ் இயக்குகிறார். ரேகா கபூர் தயாரிக்கிறார். கரீனாவுடன் சோனம் கபூர், ஸ்வரா பாஸ்கர் ஆகியோரும் முதன்மை ரோலில் நடிக்க உள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாகிவிட்ட நிலையில் கரீனா, மார்ச் மாதம் முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று முதலில் செய்தி வெளியான நிலையில் இப்போது ஏப்ரல் முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறாராம். படத்தில், கரீனாவின் பார்ட் கொஞ்சம் தான் என்பதால் அவர் சம்பந்தப்பட்ட காட்சியை ஏப்ரலில் எடுக்க இயக்குநர் எண்ணியுள்ளாராம்.