சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது |
பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான கமல் ஆர் கான், எதையாவது பேசி அவ்வப்போது சர்ச்சையில் சிக்கி கொள்வார். சுருக்கமாக சொல்லப்போனால் தென்னிந்திய பிரபலம் ராம்கோபால் வர்மா போன்றவர். இவர் போட்ட டுவிட்டர் பதிவு ஒன்று அவருக்கே பிரச்னையாகியுள்ளது. அஜய் தேவ்கன் நடித்துள்ள சிவாய் படம் இன்று உலகம் முழுக்க ரிலீஸாகியுள்ள நிலையில், இப்படத்தின் ஸ்பெஷல் ஷோ துபாயில் வெளியானது. அதில் பங்கேற்ற கமல் ஆர் கான், படத்தை பார்த்ததோடு மட்டுமல்லாமல், படத்தின் சில நிமிடங்கள் ஓடும் ஆரம்பகாட்சியையும் தனது செல்போனில் படம் பிடித்து டுவிட்டரில் வெளியிட்டு விட்டார். ஆனால் சற்று நேரத்திலேயே அதை தன் டுவிட்டர் பக்கத்திலிருந்து நீக்கிவிட்டார்.
இது இப்போது பிரச்னையாகியுள்ளது. ஏற்கனவே திரைத்துறையினர் தான் இணையதளங்களில் படம் திருட்டுத்தனமாக வெளியாகிவிடுகிறது என்று வேதனை தெரிவித்து வரும் வேளையில் திரைத்துறையை சார்ந்த ஒருவரே இப்படி செய்திருப்பது சிவாய் படக்குழுவை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதோடு, கமல் ஆர் கான் மீது நடவடிக்கை எடுக்கவும் சிவாய் படக்குழு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து சிவாய் படத்தை வெளியிட்டுள்ள ரிலையன்ஸ் நிறுவனம் அதிகாரி ஒருவர் கூறியிருப்பதாவது... ‛‛திருட்டுத்தனமாக படத்தின் ஆரம்பகாட்சியை வெளியிட்ட கமல் ஆர் கான் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க உள்ளோம். இதுகுறித்து அவர் மீது மும்பையில் உள்ள சைபர் கிரைம் போலீஸில் புகார் அளிக்க உள்ளோம் என்று கூறியுள்ளார்.