'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ், ஹந்தி, தெலுங்கு திரையுலகில் பிரபலமாக இருக்கும் ஹீரோயின்களில் இலியானாவும் ஒருவர். சில மாதங்களுக்கு முன் இவரது நடிப்பில் வெளியாகி வசூலை குவித்த படம் ‛ருஸ்டம்'. இப்படத்தில் இலியானா அக்ஷ்ய குமாருக்கு ஜோடியாக நடித்து இருந்தார். அதன் பிறகு இலியானா எந்தப்படத்திலும் நடிக்கவில்லை. சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்ற இலியானா, பட வாய்பிற்காக யாரிடமும் பிச்சை எடுக்க மாட்டேன் என்றார்.
இதைப்பற்றி இலியானா மேலும் கூறியதாவது...."பாலிவுட்டில் நடிப்பது மிகவும் பிடிக்கும். ஆனால் வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினம். கிடைத்த வாய்ப்பை நல்ல பயன்படுத்தி கொண்டால் அதை நம்மை உயர்த்தும், இல்லையென்றால் மொத்தமாக பாலிவுட் சினிமாவை விட்டே துரத்தி விடும். பட வாய்ப்பே இல்லை என்றாலும் கூட யாரிடமும் போய் வாய்ப்பிற்காக கையேந்தி (பிச்சை) நிற்க மாட்டேன் " என்றார்.
இலியானா, தற்போது ‛பாத்சாஹோ' என்ற படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் அடுத்த ஆண்டு மே மாதம் 12-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு தெரிவித்து உள்ளது.