டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சமீபத்தில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் நசீருதீன் ஷாவிடம், பாகிஸ்தான் நடிகர்களுக்கு இந்தியாவில் தடை விதிக்க வேண்டும் என மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனா அமைப்பினர் முழக்கமிட்டு வருவது பற்றி கேட்கப்பட்டது. அப்போது பதிலளித்த அவர் மகாராஷ்டிர நவநிர்மான் சேனா அமைப்பை தாக்கும் வகையில் பேசினார். பேட்டியில் அவர், பாகிஸ்தான் நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் பணியாற்றும் படங்கள் திரையிடப்படும் சினிமா அரங்குகளை இடித்து தள்ளுவோம் என இந்த வீரர்கள் அனைவரும் மிரட்டுகிறார்கள். உண்மையில் இவர்கள், பாலிவுட் படத் தயாரிப்பாளர்களுடன் மோதுவதை விட எல்லைக்கு சென்று பயங்கரவாதிகளை எதிர்த்து சண்டையிட்டு, அவர்களின் முகாம்களை அழிக்கலாம். இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நடந்த போது கூட நமது அரசு பாகிஸ்தான் உடனான தூதரக ரீதியிலான உறவை முறித்துக் கொள்ளவில்லை. அப்படி இருக்கையில் இவர்கள் மட்டும் ஏன் சினிமா நடிகர்களை குறிவைக்கிறார்கள்? என பேசி உள்ளார்.