இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
யூரி தாக்குதலுக்கு பின்னர் இந்தியா-பாகிஸ்தான் உறவில் சுமூகமான உறவு இல்லை. இருநாடுகளுக்கு இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இது இந்திய சினிமாவிலும் எதிரொலிக்கிறது. குறிப்பாக பாலிவுட் சினிமாவில் பாகிஸ்தான் கலைஞர்களுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பாலிவுட் மட்டுமல்ல இந்தியாவிலேயே பாக்., நடிகர்கள் பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பாக்., நடிகர்கள் பணியாற்றிய படங்களுக்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில், அஜய் தேவ்கன் நடிப்பு, இயக்கம் மற்றும் தயாரிப்பில் உள்ள ‛சிவாய்' படத்தில் பாகிஸ்தானை சேர்ந்த சபா ஓமர் எனும் நடிகை பணியாற்றியிருப்பதாக செய்தி பரவியுள்ளது. ஆனால் இதை சிவாய் படக்குழு மறுத்துள்ளது. இதுப்பற்றி அந்த படக்குழு வெளியிட்டுள்ள செய்தியில், ‛‛சிவாய் படத்தில் எந்த பாகிஸ்தான் நடிகையும் இல்லை, சில வேண்டுமென்றே இதுபோன்ற பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர்'' என்று கூறப்பட்டுள்ளது.