ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில், சஞ்சய் தத் நடிப்பில் வெளியான படங்கள் முன்னாபாய் எம்பிபிஎஸ் மற்றும் முன்னாபாய் எம்பிபிஎஸ்-2. இந்த இரண்டு படங்களும் சூப்பர் ஹிட்டாகின. இதையடுத்து மூன்றாம் பாகம் உருவாக இருந்தது. ஆனால் சஞ்சய் தத் சிறை சென்ற பிரச்னையால் இப்படம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது அவர் சிறைவாசத்தை முடித்துவிட்டு மீண்டும் சினிமாவில் பிஸியாக தொடங்கியுள்ளார் சஞ்சய்.
இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முன்னபாய் தயாரிப்பாளர் விது வினோத் சோப்ராவிடம் முன்னாபாய் 3 பற்றி கேட்டபோது அவர் கூறியதாவது.... ‛‛முன்னாபாய் 3 படம் கண்டிப்பாக அடுத்தாண்டு துவங்கும், தற்போது அதற்கான வேலைகள் எல்லாம் நடந்து வருகிறது. இது சஞ்சய் தத்தின் கேரியரை இன்னும் உயர்த்தும் என நான் நம்புகிறேன். அவர் ஒரு சிறந்த நடிகர், அவரால் என்ன முடியுமோ அதை சிறப்பாக செய்வார்'' என்று கூறியுள்ளார்.