தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் மாபெரும் வெற்றிபெற்ற படம் ‛த்ரிஷ்யம்'. இப்படம் தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ரீ-மேக்காகி வெற்றி பெற்றதோடு ஹிந்தியிலும் அஜய்தேவ்கன் நடிப்பில் அங்கும் சூப்பர் ஹிட்டாக ஓடியது. தற்போது அஜய், தனது சிவாய் படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் படுபிஸியாக உள்ளார். இதனிடையே சமீபத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அஜய்யிடம், த்ரிஷ்யம் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பிருக்கிறதா.? என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அஜய், ‛‛சில படங்களுக்கு இரண்டாம் பாகம் தேவைப்படாது. ஆனால் எதிர்காலத்தில் நல்ல கதையுடன் ஒரு சூழல் வந்தால் சில படங்கள் இரண்டாம் பாகமாக உருவாகும். ஆனால் த்ரிஷ்யம் மாதிரியான படங்களுக்கு இரண்டாம் பாகம் உருவாவது என்பது சற்று சிரமமான ஒன்று. அதேசமயம் ஒரு த்ரிஷ்யம் 2 படத்திற்கு ஒரு பவர்புல்லான கதை உருவானால் அதற்கான வாய்ப்பு உள்ளது'' என்றார்.