ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
கடந்த சில தினங்களுக்கு முன்னர் காஷ்மீர் மாநிலம் யூரியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தசம்பவத்தை பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் நிகழ்த்தியாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாலிவுட்டில் பிரபலமாக இருக்கும் பாகிஸ்தான் நடிகர்களான பவாத்கான், மகிரான் ஆகியோர் 48 மணிநேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கூறியிருந்தது. மேலும் பா.ஜா., கட்சியினரும் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் பவாத்கான் மற்றும் மகிராவிற்கு இயக்குநர் விக்ரம் பட் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
இதுப்பற்றி அவர் கூறியிருப்பதாவது... ‛‛பாகிஸ்தான் பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என்பதில் நாம் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும். ஆனாலும் தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல் நடந்து தான் வருகிறது, நிறையபேர் கொல்லப்பட்டு வருகின்றனர். ஆனால் நாமோ, கிரிக்கெட் வீரர்களையும், நடிகர்களையும் தடை செய்வதில் தான் குறியாக உள்ளோம்'' என்று கூறியுள்ளார்.