ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
பாலிவுட்டின் மிகத்திறமையான நடிகைகளில் ஸ்வரா பாஸ்கரும் ஒருவர். எப்படிப்பட்ட ரோலிலும் அருமையாக நடிக்கும் ஆற்றல் பெற்றவர். இவர், அடுத்தப்படியாக ஒரு படத்தில் செக்ஸ் தொழிலாளியாக நடிக்க உள்ளார். பிரபல எழுத்தாளரும், உதவி இயக்குநருமான ஆதித்யா கிருபலாணி தான் எழுதிய நாவலை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு ‛‛திக்லி அண்ட் லக்ஷ்மி பாம்'' என்று பெயர் வைத்திருக்கிறார். இது அந்த நாவலின் பெயர் தான். இந்தப்படத்தில் தான் ஸ்வரா பாஸ்கர், செக்ஸ் தொழிலாளியாக நடிக்கிறார்.
இதுப்பற்றி ஸ்வரா பாஸ்கர் கூறியதாவது... ‛‛ஆதித்யா, இப்படம் பற்றி பேசுவதற்கு முன்னர் தான் எழுதிய புத்தகத்தை என்னிடம் கொடுத்து படிக்க சொன்னார். நானும் புத்தகத்தை படித்தேன். அவ்வளவு அருமையாக இருந்தது. கதையும் சரி, என்னுடைய ரோலும் சரி இதுவரை நான் நடித்திராத ஒன்று. செக்ஸ் தொழிலாளர்களின் இன்னல்களை பற்றி விரிவாக பேசப்போகும் படமாக இது இருக்கும். இப்படத்தில் நடிக்கவும், பின்னர் அதை திரையில் காணவும் ஆவலாய் இருக்கிறேன். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது'' என்று கூறினார்.