தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து ‛எம் எஸ் தோனி தி அன்டோல்டு ஸ்டோரி' என்ற படம் உருவாகி வருகிறது. நீரஜ் பாண்டே இயக்கியுள்ள இப்படத்தில் தோனியாக சுசாந்த் சிங் ராஜ்புட் நடித்துள்ளார். தற்போது இதன் படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கான வேலைகள் நடந்து வருகிறது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டிரைலரும் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே தோனி படத்தை ஹிந்தி மட்டுமல்லாது பல மொழிகளிலும் டப் செய்து வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்ஒரு பகுதியாக மராட்டிய மொழியிலும் தோனி படம் டப் செய்து வெளியிடப்பட இருக்கிறது. ஆனால் இதற்கு மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியின் ஒரு அங்கமான சித்ராபத் கர்மாசேரி சேனாவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஹிந்தி படங்கள் டப் செய்து வெளியிடப்படும் பட்சத்தில், இங்குள்ள மாநில படங்கள் பெரிதும் பாதிக்கப்படும். தற்போது தோனி படம் வெளியாகி வெற்றி பெற்றுவிட்டால் வருங்காலத்தில் இதுபோன்ற டப்பிங் படங்கள் அதிகமாக வெளிவர தொடங்கிவிடும், ஆகவே இந்தப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.