இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தமிழில் தாம் தூம் படத்தில் நடித்தவர் நடிகை கங்கனா ரணாவத், அதன்பிறகு பாலிவுட்டில் பல அதிரடியான படங்களில் நடித்து பிரபலமானதோடு, தேசிய விருது நடிகையாகவும் திகழ்கிறார். தற்போதும் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் திருமணம் பற்றி பேசியிருக்கிறார். அதில் தான் பல திருமணம் செய்வேன் என்பது போல கூறியிருக்கிறார்.
இதுப்பற்றி கங்கனா அளித்துள்ள பேட்டியின் விபரம் வருமாறு... ‛‛ யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் நான் பேச மாட்டேன். ரியல் எஸ்டேட், பங்குச்சந்தை, தங்கம் போன்றவற்றில் எனக்கு முதலீடு செய்வது பிடிக்கும். என்னுடைய முதல் திருமணத்திற்கான உடையை மானங்தான் வடிவமைப்பார். முதல் திருமணமா...?, அப்படியென்றால் நிறைய திருமணம் செய்வீர்களா என்று பத்திரிகையாளர்கள் கேட்க, அதற்கு பதிலளித்த கங்கனா, ஏன் கூடாது ஒரு திருமணம் நடக்கும்போது பலமுறை திருமணம் நடக்கும் என நம்புகிறேன். மேலும் எனக்கு பணம் சம்பாதிக்கவும், அதை செலவும் செய்யவும் பிடிக்கும். இல்லற வாழ்க்கையில் ஒன்றிரண்டு குழந்தைகளோடு நிறுத்தி கொள்ள மாட்டேன், நிறைய குழந்தைகள் பெற்று கொள்வேன் என்று தடாலடியாக கூறியிருக்கிறார்.