ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் |
ஷங்கரின் ஐ படத்திற்கு பிறகு தங்கமகன், கெத்து, தெறி என வரிசையாக நடித்த எமிஜாக்சனுக்கு எந்த படமும் பெரிதாக கைகொடுக்கவில்லை. இந்த நிலையில், தற்போது ஷங்கர் இயக்கத்தில் ரஜினி-அக்சய்குமார் நடிக்கும் 2.ஓ படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு ஆளி என்ற இந்தி படத்தில் நடிக்கும் எமிஜாக்சன், ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா-தமன்னா நடித்துள்ள தேவி படத்தில் நட்புக்காக நடித்திருக்கிறார். ஆனால் இதையடுத்து தமிழில் அவருக்கு எதிர்பார்த்தபடி புதிய படங்கள் புக்காகவில்லை.
அதனால் தற்போது ஆளி இந்தி படத்தில் நடித்து வரும் எமிஜாக்சன், இந்தியில் புதிய படங்களை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கிறாராம். ஏற்கனவே இந்தியில் ஏக் திவானா தா, சிங் இஸ் பிலிங் போன்ற படங்களில் நடித்திருப்பதால் பாலிவுட்டில் எமிக்கென்று ஒரு ரசிகர் வட்டாரம் உள்ளதாம். மேலும், ரஜினி-அக்சய்குமாருடன் நடித்து வரும் 2.ஓ படம் இந்தியிலும் வெளியாகயிருப்பதால், இந்த சமயத்தில் பாலிவுட்டில் முயற்சி எடுத்தால் பெரிய அளவிலான படங்கள் கிடைக்கும் என்று லண்டனில் இருந்து அடிக்கடி மும்பைக்கு சென்று அங்குள்ள முன்னணி டைரக்டர்களுடன் படவேட்டை நடத்தி வருகிறாராம் எமிஜாக்சன்.