‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
‛பாஜிராவ் மஸ்தானி' படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, ‛பத்மாவதி' படத்தை இயக்க உள்ளார். மீண்டும் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே ஜோடி இணைகிறது. இதுவும் சரித்திரகால படம் தான். இப்படத்தில் இவர்கள் இருவர் தவிர இன்னொரு முக்கிய ரோலும் உள்ளது. அதாவது தீபிகாவின் கணவர் ரோலில் நடிக்க ஒரு நடிகர் தேவை, அதனால் இப்படத்தில் பாகிஸ்தானை சேர்ந்த நடிகர் பவாத் கானை நடிக்க கேட்டுள்ளார், அவரும் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டார். இப்படத்தில் ரன்வீர் சிங், அலாவுதீன் கில்ஜி வேடத்திலும், தீபிகா பத்மாவதி ரோலிலும், அவரது கணவராக பவாத் கானும் நடிக்க உள்ளனர். பாஜிராவ் மஸ்தானி படத்தை காட்டிலும் இப்படம் இன்னும் பிரமாண்டமாய் உருவாக இருக்கிறது. குறிப்பாக இப்படத்தின் லீடு ரோலில் நடிக்க உள்ள இந்த மூவரிடமும் சுமார் 200 நாட்கள் சஞ்சய் லீலா பன்சாலி கால்ஷீட் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தை ஆரம்பிக்க இருக்கும் இயக்குநர், அடுத்தாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்.