புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
நடிகர் சன்னி லியோன் மீது டில்லி அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில், கபடி போட்டி தொடரின் துவக்க விழாவில் சன்னி லியோன், தேசிய கீதத்தை தவறாக பாடியதாக கூறப்பட்டுள்ளது. சிந்த் என்ற வார்த்தைக்கு பதிலாக சிந்து என சன்னி லியோன் பாடியதாக கூறப்பட்டுள்ளது. தற்போது சன்னி லியோன் துபாயில் இருந்து வருகிறார். இந்த புகார் பற்றி சன்னி லியோனிடமே கேட்டோம். அதற்கு அவர், இது என்னை மிகவும் வேதனைபட வைத்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக நான் கடினமாக உழைத்தேன். எந்த நிகழ்ச்சியை பலரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். எனது ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு செயலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. எந்தவொரு விஷயத்திற்குமே எப்போதும் எதிர்ப்பு இருக்கும் என தெரியும். அதற்கு என்னால் எதுவும் செய்ய முடியாது. என்னை வெறுப்பவர்கள் சுற்றிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களின் செயல்களை உங்களால் தடுக்க முடியாது. எனது அணியினரும், எனது குடும்பத்தாரும் என்னுடன் இருப்பது மிகவும் பெருமையாக உள்ளது. என்னை வெறுக்கும் அத்தகைய நபர்களால் இப்போது வரை என்னை வீழ்த்த முடியவில்லை. அதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.