'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இன்றைக்கு சமூக வலைதளங்கள் தான் அனைவரையும் ஆட்டுவிக்கிறது என்ற நிலைமைக்கு இந்த உலகம் வந்துவிட்டது. குறிப்பாக சினிமா பிரபலங்கள், சமூக வலைதளங்கள் மூலமாகத்தான் தங்களை, ரசிகர்களுடன் தொடர்பு கொள்கின்றனர். கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல பிரபலங்கள் பேஸ்புக், டுவிட்டர் போன்ற வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதில் சில போலியான முகவரிகளும் உண்டு.
இதனிடையே பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கத்ரீனா கைப், தன்னை டுவிட்டரில் இணைத்து கொள்ள இருக்கிறார். வருகிற ஜூலை 16ம் தேதி கத்ரீனாவிற்கு பிறந்தநாள், அன்றைய தினமே அவர் அதிகாரப்பூர்வமாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் போன்றவற்றில் இணைய உள்ளார். இனி தன் படம் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் இந்த சமூக வலைதளங்களில் பகிர உள்ளார். மேலும் அவ்வப்போது தனது ரசிகர்களுடனும் கலந்துரையாட இருக்கிறார். முதற்கட்டமாக கத்ரீனா, தான் நடித்து வரும் ‛‛பார் பார் தேகோ'' படத்தை புரொமோஷன் செய்ய இருக்கிறார். இப்படம் செப்.,9ம் தேதி வெளியாக இருக்கிறது.