ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சமீபத்தில் சர்ச்சையுடன் வெளியான படம் ‛உட்தா பஞ்சாப்'. இப்படத்தில் ஷாகித் கபூர், ஆலியாபட், கரீனா கபூர் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்திருந்தனர். இவர்களில் ஆலியாபட்டின் ரோல் அனைவராலும் பாராட்டப்பட்டது. இப்படத்தில் ஆலியா, பீகார் பெண்ணாக நடித்திருந்தார். ஆலியாவின் நடிப்பிற்கு தேசிய விருது கிடைக்கும் என்று ஷாகித் கபூர், சில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தார். இப்போது அதே கருத்தை நடிகை கரீனா கபூரும் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து கரீனா மேலும் கூறியதாவது... ‛‛ஷாகித் கபூர் சொன்னதை நான் ஏற்கிறேன். உட்தா பஞ்சாப் படத்தில் ஆலியாவின் நடிப்பு அருமையாக இருந்தது. ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரும் அவரின் நடிப்பை பாராட்டினார்கள். தேசிய விருதுக்கு ஆலியா தகுதியானவர், அவருக்கு விருது கிடைக்கும்'' என்று கூறியுள்ளார்.