ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சுல்தான் படம் தொடர்பாக சல்மான் கூறிய சர்ச்சை கருத்திற்கு நேரில் ஆஜராகும்படி தேசிய மகளிர் ஆணயம், சம்மன் அனுப்பியிருக்கிறது. பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான்கான், அவ்வப்போது சர்ச்சையிலும் சிக்கி வருகிறார். சமீபத்தில் அவர் நடித்துள்ள சுல்தான் படம் தொடர்பாக பேட்டியளித்த போது இந்தப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு திரும்பும் போது ‛தான் ஒரு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் போன்று உணர்ந்ததாகவும், தன்னால் நிற்ககூட முடியவில்லை என்றும் கூறினார்.
சல்மானின் இந்த பேச்சிற்கு பெண்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. மேலும் தேசிய மகளிர் ஆணையம் சல்மானுக்கு நோட்டீஸ் அனுப்பியது. சில ஊர்களில் சல்மான் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த பிரச்னை தொடர்பாக சல்மான்கான், தன் வக்கீல் மூலம் தேசிய மகளிர் ஆணையத்திற்கு பதிலளித்திருக்கிறார். அதில் சல்மான்கான் இந்த பிரச்னைக்கு விளக்கம் மட்டுமே அளித்துள்ளார், மன்னிப்பு கோரவில்லை.
இந்நிலையில், சல்மானின் விளக்கத்தை பார்த்த மகளிர் ஆணையம், அவருடைய விளக்கத்தில் திருப்தி இல்லாததால், சல்மானை ஜூலை 8-ம் தேதி நேரில் ஆஜராக சொல்லி சம்மன் அனுப்பியுள்ளது. இதனால் சல்மானுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.