தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகான். அவர் தற்போது தான் தயாரித்து நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. அக்ஷத் வர்மா இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்பை அருகில் உள்ள பவாவில் நடந்த வருகிறது.
நேற்று முன்தினம் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டது. அப்போது வில்லன்கள் அவரை அடித்து வீழ்த்துவது போன்ற காட்சியில் அவர் ஓடிவந்து கிழே விழுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. வேகமாக ஓடிவந்த சயீப் அலிகான் கால் இடறி நிஜமாகவே நிலைகுலைந்து கீழே விழுந்தார். இதில் அவரது கை வேகமாக தரையில் ஊன்றியதால் விரல் எலும்புகள் முறிந்தது. வலியால் துடித்த அவரை அந்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ஆபரேஷன் நடந்தது.
சயீப் அலிகான் நலமுடன் இருப்பதாகவும் அவர் சில வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் அவர் தனது பிடிப்பிடிப்பை தள்ளி வைத்துள்ளார். தொடர்ந்து சயீப் அலிகான் சிகிச்சை பெற்று வருகிறார். ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்று அவரது சகோதரி சோஹா கூறியுள்ளார்.