சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான் கான். முன்னணி நடிகராக இருந்தபோதும் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவது சல்மானின் இயல்பாகிவிட்டது. சமீபத்தில் அவர் கூறிய கருத்து ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது சல்மான், ‛சுல்தான்' படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்று விட்டு வரும்போது, தான் கற்பழிக்கப்பட்ட பெண் போன்று உணர்ந்ததாக கூறினார். இது பெண்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்த, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பெண்கள் அமைப்பினர் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் இந்த கருத்து தொடர்பாக சல்மான் கான் மீது நடிவடிக்கை கோரி இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. லக்னோவை சேர்ந்த சமூகர் ஆர்வலர் ரப்தாத் ஜமால் என்பவர் லக்னோ கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதேப்போன்று கான்பூரில் வக்கீல் ஒருவரும் கான்பூர் கோர்ட்டில் சல்மான் மீது வழக்குபதிவு செய்துள்ளார்.