தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஏக்தா டைகர், பாஜிராவ் மஸ்தானி படங்களுக்கு பிறகு கபீர்கான், சல்மான் மீண்டும் இணைய இருக்கிறார்கள். இப்படத்திற்கு 'டியூப் லைட்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அரசியல் பின்னணியில் இப்படம் உருவாக இருக்கிறது. இதனிடையே இப்படத்தில் நடிகை தீபிகாவை நடிக்க கேட்டதாகவும், ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டதாகவும் நேற்று செய்தி வெளியானது. ஆனால் படத்தின் இயக்குநர் கபீர்கானோ, தான் தீபிகாவை சந்தித்து பேசவேயில்லை என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து கபீர்கான் கூறியுள்ளதாவது... ''டியூப் லைட் படம் தொடர்பாக நான் தீபிகாவை சந்தித்து பேசவேயில்லை, அப்படியிருக்கும்போது இந்தப்படத்திலிருந்து எப்படி அவர் விலகுவார். தற்போதைக்கு படத்தில் சல்மான்கான் நடிப்பது மட்டும் தான் முடிவாகியுள்ளது. மற்றபணிகள் எல்லாம் நடந்து வருகிறது. ஜூலை மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது, அடுத்தாண்டு படம் ரிலீஸாகும் என்று கூறியுள்ளார்.