'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஒருகாலத்தில் காதலர்களாக வலம் வந்தவர்கள் ஷாகித் கபூரும், கரீனா கபூரும். பின்னர் இருவரும் பிரிந்துவிட்டனர். ஷாகித் மீராவையும், கரீனா, சைப் அலிகானையும் திருமணம் செய்து கொண்டார்கள். தற்போது கரீனா கபூர், 'கி அண்ட் கா' என்ற படத்தில் நடித்து வருவதுடன் கரண் ஜோகரின் 'உத்தா பஞ்சாப்' படத்திலும் நடிக்க உள்ளார். இப்படத்தில் ஷாகித் கபூர் ஹீரோவாக நடிக்கிறார். உத்தா பஞ்சாப்பில் கரீனாவை நடிக்க வைக்க வேண்டும் என்று ஷாகித் கபூர் கேட்டு கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக கரீனா கபூர் கூறியுள்ளதாவது... இந்தப்படத்தில் நான் நடிக்கிறேன் என்றால், என்னால் நடிக்க முடியும் என்பதால் தான் கரண் ஜோகரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அவர் என்னிடம் பேசும்போது, இப்படத்தில் உள்ள ரோல் எனக்கு செட்டாகும் என்பதாலும், நான் தான் நடிக்க வேண்டும் என ஷாகித் கபூர் கேட்டு கொண்டதாகவும் அவர் கூறினார். அதனால் தான் நடித்தேன் என்றார்.