தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் சினிமாவில் என்ட்ரியான குறுகிய காலத்தில் பிரபலமான இசையமைப்பாளர்களில் சந்தோஷ் நாராயணன், அனிருத் ஆகிய இருவரும் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் இருவருமே முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தவர்கள். இதில் அனிருத், வந்த வேகத்திலேயே விஜய், அஜீத் படங்களுக்கு இசையமைத்து முன்னணிக்கு வந்தார். அதேபோல், சந்தோஷ் நாராயணனும் அட்டக்கத்தி, பீட்சா, சூதுகவ்வும், குக்கூ, ஜிகர்தண்டா, மெட்ராஸ், இறுதிச்சுற்று என தொடர் ஹிட்களாக கொடுத்து வந்தவர். தற்போது ரஜினியின் கபாலி மற்றும் பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கும் இசையமைக்கிறார். அந்த வகையில், பீப் பாடல் சர்ச்சையில் அனிருத் சிக்கியபோது அவரை ஓவர்டேக் செய்து வேகமாக முன்னேறி விட்டார் சந்தோஷ்நாராயணன்.
மேலும், தற்போது பத்து முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன், இறுதிச்சுற்று படம் மூலம் இந்திக்கு சென்றிருக்கிறார். அவரது இசையை ரசித்த அங்குள்ள ஒரு பிரபல இயக்குனர் சந்தோஷ் நாராயணனைப் பற்றி விசாரித்ததோடு, தொடர்பு கொண்டு பேசியுள்ளாராம். அதனால், கூடிய சீக்கிரமே இந்தி படத்தில் சந்தோஷ் நாராயணன் கமிட்டாகி விடுவதற்கான அறிகுறிகள் அதிகமாக இருப்பதாக கூறுகிறார்கள்.