பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார் பிரியங்கா சோப்ரா. இவர் நடித்து உள்ள, 'குவான்டிகோ' என்ற அதிரடியான ஆங்கில தொலைக்காட்சி தொடர், ஏ.பி.சி., 'டிவி'யில், ஒளிபரப்பாகி வருகிறது. இதில், எப்.பி.ஐ., அதிகாரியாக நடித்துள்ளார் பிரியங்கா. இந்திய நடிகை ஒருவர், அமெரிக்க டிவி தொடரில், மிக முக்கியமான கேரக்டரில் நடிப்பது இதுவே முதல் முறை என்பதால், பாலிவுட் பிரபலங்கள் அவரை பாராட்டு மழையில் நனைய வைக்கின்றனர். 'டுவிட்டர், பேஸ்புக்' என, சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டுகளால், திக்கு முக்காடிப் போயுள்ளார் பிரியங்கா. அடுத்ததாக, அவர் நடித்துள்ள,'பஜிரோ மஸ்தானி' என்ற இந்தி படம், டிசம்பரில் திரைக்கு வருகிறது. இதில், ரன்வீர் சிங், தீபிகா படுகோனே போன்றோர் நடித்திருந்தாலும், பிரியங்காவுக்கு தான் முக்கியமான வேடம். மேலும், இந்த படம் வெளியாகும் அதே நாளில், ஷாரூக் - கஜோல் இணைந்து நடித்துள்ள, 'தில்வாலே' என்ற படமும், வெளியாகவுள்ளது.