ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் சிறந்த நடிகர் மட்டுமல்லாது, சேட்டைக்காரர் என்று நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ் கூறியுள்ளார். ஹவுஸ்புல் 3 படத்தில், அக்ஷய் குமாருடன் இணைந்து ஜாக்குலின் பெர்னான்டஸ் நடித்து வருகிறார். இதனிடையே பத்திரிகையாளர்களை சந்தித்த ஜாக்குலின் பெர்னான்டஸ் கூறியதாவது, அக்ஷய் குமார் சிறந்த நடிகர். இதுமட்டுமல்லாது, அவர் சேட்டைக்காரர். அவரின் சேட்டைகள் சில சமயங்களில் நம்மை அச்சுறுத்திவிடும். ஹவுஸ்புல் படத்தின் படப்பிடிப்பின்போது, அகஷயின் சேட்டைகளிலிருந்து காப்பாற்றுமாறு, ரித்தேஷ் தேஷ்முக்கிடம் பலமுறை முறையிட்டிருந்தேன் என்று கூறினார். அக்ஷய் குமார், ரித்தேஷ் தேஷ்முக், அபிஷேக் பச்சன், ஜான் ஆபிரகாம், ஜாக்குலின் பெர்னான்டஸ், லிசா ஹைடன், ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோர் நடிப்பில் ஹவுஸ்புல் 3 துரிதமாக உருவாகி வருகிறது.