இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
படத்திற்கு முக்கியம் எனில் முத்தக்காட்சி உள்ளிட்ட நெருக்கமான காட்சிகளில் நடிக்க தனக்கு எவ்வித தயக்கமுமில்லை என்று இளம் நடிகர் இம்ரான் அப்பாஸ் கூறியுள்ளார்.
கிரியேச்சர் 3டி படத்தின் மூலம், பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகியுள்ள பாகிஸ்தான் நடிகர் இம்ரான் அப்பாஸ், அப்படத்தை தொடர்ந்து, ஜானிசர் என்ற படத்தில் நடித்துள்ளார். அந்த படம், இவ்வார இறுதியில் வெளியாக உள்ளது. அப்படத்தில், தனது கேரக்டர் குறித்தும், அப்படப்பிடிப்பினிடையே ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்....
ஜானிசர் படத்திற்கும், கிரியேச்சர் படத்திற்கும் என்ன வித்தியாசம்?
ஜானிசர் படமும், எனது முதல் படமான கிரியேச்சர் 3டி படமும் முற்றிலும் வேறுபட்டவை. இரண்டிற்கும் சிறிதளவும் சம்பந்தமில்லை. கிரியேச்சர் 3 டி படம், நாளைய உலகம் பற்றியது, ஆனால், ஜானிசர் படமோ, நேற்றைய தினத்தை பற்றியது. ஜானிசர் படத்தை ஒப்பிடுகையில், கிரியேச்சர் 3டி படத்தில் நடிப்பது ஈஸியாக இருந்தது. ஜானிசர் படத்தில், எனக்கு மிகவும் சவாலான கேரக்டர். இத்தகைய ரோல்களின் மூலமே, எனது திறமைகள் வெளிப்படும் என்பதால், இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
இந்த படத்திற்காக, எந்தவகையில் தங்களை தயார் செய்துகொண்டீர்கள்?
ஜானிசர் படத்தில் மிகவும் சவாலான கேரக்டர். இதற்காக, நான் என்னை தயார்படுத்திக்கொள்ளவே, அவகாசம் தேவைப்பட்டது. படத்தின் இயக்குநரும் எனக்கு ஒருமாதகால அவகாசம் தந்தார். இந்த படத்தில் என் வாய் பேசுவதைப்போலவே, கண்களும் பேசும்....இந்த படத்திற்காக, நான் உருது மொழியை கற்றுக்கொண்டேன். குதிரையேற்ற பயிற்சியும் பெற்றேன். பாடி லாங்குவேஜ்க்காக நிறைய பிரயத்தனம் மேற்கொண்டேன். ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால், இந்த படத்திற்காக, எனது முழு உழைப்பை அர்ப்பணித்துள்ளேன்.
பிரபலம் ஆவதற்கு எது முக்கியம்?
திரைத்துறை மட்டுமல்லாது மற்ற எல்லா துறைகளிலும் பிரபலம் ஆக வேண்டுமென்றால், கடின உழைப்பு ஒன்றே அதற்கு தீர்வாக இருக்க முடியுமே தவிர, மற்ற எதுவும் உதவாது. நான் பாகிஸ்தானில், படங்களில் மட்டுமல்லாது சில சீரியல்களிலும் நடித்துள்ளேன். நான் பிரபலமடைந்ததற்கு எனது கடின உழைப்பே காரணம். மற்றபடி பெரிய பேனர் மற்றும் பணம்ஓருபோதும் காரணமாகாது. பாலிவுட் திரையுலகில் நான் இப்போது தான் அடி எடுத்து வைத்துள்ளேன். நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்பதைவிட, சிறந்த மற்றும் சில படங்களில் நடித்தாலே போதும் என்ற மனப்பான்மை கொண்டவன் நான். அதற்கு நிறைய கடின உழைப்பு தேவை என்பதை அறிவேன். எனக்கு கதையில் திருப்தி ஏற்படும் பட்சத்திலான படத்தில் மட்டுமே நடிப்பேன்....
பாகிஸ்தானிலிருந்து பாலிவுட்......எப்படி உள்ளது?
நான் பாலிவுட் திரையுலகி்ற்கு புதியவன் அல்ல. இதற்குமுன் ஹிந்தி சீரியல்களில் நடிக்க எனக்கு அழைப்பு வந்தது. நான் தான் அதை ஒப்புக்கொள்ளவில்லை. பின் பாகிஸ்தானில் படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்தேன். அதில் எனது நடிப்பை பார்த்து சஞ்சய் லீலா பன்சாலிய மற்றும் மகேஷ் பட், எனக்கு அவரது படத்தில் நடிக்க அழைப்பு விடுத்தனர். ஆனால், அப்போதிருந்த நேரத்தில், என்னால் அதற்கு ஒத்துக்கொள்ள இயலவில்லை. தற்போது கிரியேச்சர் 3டி படத்தின் கதை பிடித்ததன் காரணத்தினாலேயே, அப்படத்தில் நடிக்க சம்மதித்தேன்.
பாகிஸ்தான் சீரியல்களில் நடித்துள்ளீர்கள். இந்திய மொழி சீரியல்களிலும் நடிப்பீர்களா?
பாகிஸ்தானில், நான் நிறைய சீரியல்களில் நடித்திருப்பது உண்மைதான். இந்திய மொழி சீரியல்களிலும் நடிக்க வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன...எனக்கு இந்திய மொழி சீரியல்களில் நான் நடிக்க விருப்பமில்லை. ஏனெனில், இந்திய சீரியல்கள் குறைந்தது 400 முதுல் 500 எபிசோட்கள் என்று நீண்டுகொண்டே இருக்கும். அதில் நான் நடித்தேன் என்றால், எனது மற்ற வேலைகள் பாதிக்கப்படும். எனவே, இந்திய மொழி சீரியல்களில் நடிக்க தனக்கு விருப்பமில்லை.
பாலிவுட் படங்களில் நெருக்கமான காட்சிகள் அதிகம் இருக்கும். அவ்வாறு நடிக்க தங்களுக்கு சம்மதமா?
பாகிஸ்தானில் இருந்து பாலிவுட்டிற்கு வரும் நடிகர்கள், முத்தக்காட்சி போன்ற நெருக்கமான காட்சிகளில் நடிப்பதை தவிர்த்து வருகிறார்கள் என்பது உண்மையே.. படத்திற்கு முக்கியம் எனில் முத்தக்காட்சி போன்ற நெருக்கமான காட்சிகளில் நடிக்க நான் தயாராக உள்ளேன். முத்தக்காட்சி மற்றும் நெருக்கமான காட்சிகளில், படங்களில் மட்டுமே நடிப்பேன். இந்த காட்சிகளுக்காக, படத்தை ஏற்றுக்கொள்ள தயங்க மாட்டேன்..
பாகிஸ்தான் திரையுலகிற்கும், பாலிவுட் திரையுலகிற்கும் எத்தகைய வித்தியாசத்தை உணர்கிறீர்கள்?
முற்காலத்தில், பாகிஸ்தான் திரையுலகமும், பாலிவுட் திரையுலகமும் சமான அளவிலான போட்டியாளர்களாக இருந்தனர். ஆனால் தற்போது, பாகிஸ்தான் திரையுலகம் தோல்வியடைந்துவிட்டது என்றே கூறவேண்டும். பல இளம் நடிகர்கள், மீண்டும் பாகிஸ்தான் திரையுலகிற்கு புத்துயிர் அளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தான் திரையுலகை, ஒருபோதும் இந்திய திரையுலகத்துடன் ஒப்பிட முடியாது...கூடாது...
பாலிவுட் திரையுலகில், உங்களது போட்டியாளராக யாரை நினைக்கிறீர்கள்?
பாலிவுட் திரையுலகம் என்பது ஒரு கடல் போன்றது. நான் தற்போது தான் குளம் , குட்டையில் நீச்சலடிக்க கற்றுக்கொண்டு வருகிறேன். நான் இன்னும் செல்ல வேண்டிய தூரம் நிறைய உள்ளது. இந்நிலையில், எனக்கு போட்டியாளர் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்திய ரசிகர்ளுக்கு, எனது திறமையின் மூலம், நான் யாரென்று காட்ட வேண்டும். பின்னர்தான் நான் மற்றவர்களோடு போட்டிபோட்டு நடிக்க முடியும் என்று இம்ரான் அப்பாஸ் கூறினார்.