பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
“இவன் பதவியே அப்பவோ இப்பவோன்னு ஆடிக்கிட்டு இருக்காம்.. இதுல எனக்கு இவன் அமைச்சர் பதவி வாங்கி தரானாம்” என அமைதிப்படை படத்தில் மணிவண்ணன் கிண்டலாக ஒரு வசனம் எழுதியிருப்பார். தற்போது சல்மான்கான் நிலை அப்படித்தான் மாறி வருகிறது.. இவரே ஆள் ஒருவரை கார் ஏற்றிக்கொன்ற வழக்கில் கைதாகி, சிறையில் இருந்து இப்போதுதான் ஒரு வழியாக ஜாமீனில் வெளியே வந்து உலாவுகிறார்.. சூழ்நிலை அறிந்து பேசாமல் அமைதியாக இருக்கவேண்டாமா..? மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனைக்குள்ளான யாகூ மேனனுக்கு ஆதரவாக இவர் ட்வீட்டரில் கருத்து சொல்லியிருக்கிறார்.
இதனால் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவரான பிரவீன் தொகாடியாவின் கண்டனத்துக்கு ஆளாகியிருக்கிறார்.. “நீதிமன்றமே விசாரித்து தண்டனை கொடுத்த குற்றவாளிக்கு ஆதரவாக பேசும் சல்மான்கான் போன்றவர்கள் பாகிஸ்தானுக்கு சென்று, தீவிரவாதிகளுக்கு இடையில் வசித்தால் தான் சந்தோஷமாக இருப்பார்கள் போல. சல்மான்கானின் பெற்றோர் 1947ல் அப்போதே பாகிஸ்தானுக்கு போகாமல் தவறு செய்துவிட்டனர். இப்போது அந்த தவறை திருத்திக்கொள்ளும் வாய்ப்பாக சல்மான்கான் பாகிஸ்தானுக்கு சென்று வசிக்கட்டும்” என கடுமையாக தாக்கியுள்ளார். தொடர்ந்து விமர்சனங்கள் அதிகரிக்கவே சல்மான்கான் அந்த ட்வீட்டை அழித்துவிட்டார்.