'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தானு வெட்ஸ் மனு, ராஞ்சனா, தானு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநர் ஆனந்த் எல்.ராய். சமீபத்தில் வெளிவந்த தானு ரிட்டர்ன்ஸ் ரூ.100 கோடி கிளப்பில் சேர்ந்தது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறார் ஆனந்த். இந்த மகிழ்ச்சியோடு கடந்தசில நாட்களுக்கு முன்னர் தனது பிறந்தநாளையும் கொண்டாடினார். இதனிடையே ஆனந்த் எல்.ராய்யின் அடுத்தப்படம் எந்தமாதிரி இருக்கும் என்று அனைவரது மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில், ஆனந்த்.எல்.ராய் அளித்துள்ள பேட்டி ஒன்றில், என்னுடைய கதைகள் தான், ஹீரோக்களிடம் என்னை அழைத்து செல்லும். இதில் எந்த சிரமமும் எனக்கு இல்லை. நான் எப்போதும் ஹீரோக்களுக்காக கதை எழுத மாட்டேன், என் கதைகள் எப்போதும் ஹீரோவாக இருக்கும் என்று கூறியுள்ளார்.