பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
சமீபத்தில் பாலிவுட்டில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கும் படம் ஏபிசிடி-2. வருண் தவான், ஸ்ரத்தா கபூர், பிரபுதேவா உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளிவந்த இப்படத்தை ரெமோ டிசோசா இயக்கியிருந்தார். இப்படத்தில் குரூப் டான்ஸர் வேடத்தில் நடித்தவர் நிலேஷ் நிர்பாவனே. இவர் மும்பையில் வசிக்கிறார்.
இந்நிலையில், நிலேஷ், மனநலம் பாதித்த 14 வயது சிறுமி ஒருவரை, கடந்த ஒரு மாதகாலமாக பாலியல் பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்தியுள்ளார். தனது மூன்று நண்பர்களுடன் சேர்ந்து இந்த கொடூர செயலை செய்திருக்கிறார். அதுமட்டுமின்றி சிறுமியின் பற்களை இரண்டையும் உடைத்திருக்கிறார்.
சிறுமியின் பெற்றோருக்கு இந்த விஷயம் எதுவும் தெரியவில்லை. பள்ளியில் இருந்தபோது சிறுமியின் நடவடிக்கையில் பல்வேறு மாற்றங்கள் தெரிந்துள்ளது. இதனையடுத்து பள்ளி ஆசிரியை ஒருவர் அந்த சிறுமியிடம் விசாரித்தபோது இந்த உண்மைகள் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த சிறுமியின் பெற்றோர் புனே போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க, போலீசார், நிலேஷை விசாரித்துள்ளனர். அதில் தான் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் நிலேஷை கைது செய்துள்ளனர். மேலும் நிலேஷின் நண்பர்கள் மூவரும் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.