ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மும்மை மாடலாக இருந்து தமிழ் படத்தில் நடிக்கும் ஆர்வத்தில் சென்னை வந்தவர் சஞ்சனாசிங். ரேணிகுண்டா படத்தில் ஹீரோயினின் அக்காவாகவும், பாலியல் தொழிலாளியாகவும் நடித்தார். அதன் பிறகு கோ, மயங்கினேன் தயங்கினேன், மறுபடியும் ஒரு காதல் படங்களில் ஒரு பாட்டுக்கு நடனமாடினார் ரகளைபுரம், அஞ்சான், வெயிலோடு விளையாடு, படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்தார். வெளிவர இருக்கும் ரெண்டாவது படத்தில் வில்லியாக நடித்துள்ளார். காதல் பாதை, இரவும் பகலும், தப்பு தாளங்கள், தனியொருவன் படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தோடா லத்ப் தோடா இஷாக் என்ற இந்திப் படத்தில் நடிக்கிறார் சஞ்சனாசிங். அதில் நடன மங்கையாக நடிக்கும் சஞ்சனா ஒரு பாட்டுக்கும் கவர்ச்சி ஆட்டம் ஆடுகிறார். படத்தை சச்சின் குப்தா இயக்கி உள்ளார். ராஜ்பால் யாதவ், ஹிட்டன் தேஜ்வானி, சஞ்சய் மிஸ்ரா, நேகா பவார், ராகேஷ் பேடி நடிக்கிறார்கள், விக்ரம் குஜாரியா இசை அமைக்கிறார்.
இரண்டு இளைஞர்கள் வேலை எதுவுமின்றி தினமும் பார்ட்டி, பங்ஷன். பெண்களை பிரண்டு பிடித்து ஜாலியாக இருத்தல் என வாழ்கிறார்கள். திடீரென ஞானோதயம் வந்து வேலை தேடுகிறார்கள். எங்கு தேடியும் அது கிடைக்கவில்லை. அவமானப்படுத்தி அனுப்புகிறார்கள். கடைசியில் அவர்களுக்கு ஒரு பியூட்டி பார்லரில் வேலை கிடைக்கிறது. அதனை இரண்டு அழகான பெண்கள் நடத்துகிறார்கள். இவர்களுக்கு ஜாக்பாட் அடித்த மாதிரி இருந்தது. ஆனால் அதன் பிறகுதான் இவர்களுக்கு பல பல்புகளும், ஆப்புகளும் விழுகிறது. இப்படி போகும் செக்சுவல் காமெடி படம் இது. சஞ்சனாசிங்கை மையப்படுத்தி தமிழில் டப் செய்து வெளியிடவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.