ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ரோஷித் ஷெட்டி இயக்கத்தில், ஷாரூக் கான், வருண் தவான் இணையும் தில்வாலே படத்தின் சூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஷாரூக் கானுடன் இணைந்து நடிக்கிறீர்களே? உங்களுக்கு பயமாக இருந்ததா? என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த வருண் தவான், இந்த படம் மட்டுமல்லாது, எந்த படம் ஆனாலும், நடிப்பவர்கள் அனைவரும் நடிகர்களே. அவர்கள் எத்தகைய இடத்தில் இருப்பினும், தொழில்முறையில் அவர்கள் நடிகர்களே....இயக்குநர் என்ன சொல்கிறாரோ..அதனை கேட்டு அனைவரும் நடித்தாக வேண்டும். இதில் எவ்வித மாற்றுக்கருத்துமில்லை. எனது தந்தையும் ஒரு இயக்குநர் தான். எனவே, படத்தின் இறுதிநாள் சூட்டிங் வரை, அனைவரும் நடிகர்கள் மற்றும் சக கலைஞர்கள் தான், இதில் யாரும், யாருக்காகவும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று வருண் தவான் கூறியுள்ளார்.