டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
அபிஷேக் பச்சன், தற்போது உமேஷ் சுக்லா இயக்கும், ''ஆல் இஸ் வெல்'' படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். முதற்கட்ட படப்பிடிப்புகள் முடிந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில், இவர் படப்பிடிப்பில் இருந்தபோது ஷூட்டிங் முடித்துவிட்டு ஓய்வில் இருந்தார். அப்போது அருகில் உள்ள பள்ளி மாணவர்கள் கூடைப்பந்து விளையாடி மகிழ்வதை கண்டார். இதை பார்த்ததும் உற்சாகமான அபிஷேக் பச்சனும் மாணவர்களுடன் விளையாட தொடங்கிவிட்டார்.
அபிஷேக் பச்சன் விளையாட்டின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். குறிப்பாக கூடைப்பந்து விளையாட்டில் அலாதி பிரியம் கொண்டவர். சின்ன வயதில் கூடைப்பந்து விளையாடியிருக்கிறார். சமீபத்தில், மாடிசன் ஸ்குயர் கார்டனில் நடந்த என்பிஏ., விளையாட்டு போட்டியின் தூதராக இருந்தார். மேலும் அங்கு ஐந்து நாட்கள் தங்கி விளையாட்டு வீரர்களுடன் தனது பொழுதையும் கழித்ததோடு அவர்களோடு விளையாடியும் மகிழ்ந்துள்ளார் அபிஷேக்.