தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில், நடிகர்கள் அமிதாப் பச்சன், திலீப் குமார், பின்னணி பாடகி சுதா ரகுநாதன், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்ட 104 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கி கவுரவித்தார் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை கவுரவிக்கும் வகையில், மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி இந்தாண்டுக்கான பத்ம விருதுகளை ஜனவரி 26ம் தேதி அறிவித்தது மத்திய அரசு. இதற்கான விழா, ஜனாதிபதி மாளிகையில் இன்று நடந்தது. பாலிவுட்டின் மெகா ஸ்டார்களான அமிதாப் பச்சன் மற்றும் திலீப் குமார் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி.
இதேப்போல் பின்னணி பாடகி சுதா ரகுநாதன், இயக்குநர் ஜானு பருவா ஆகியோருக்கு பத்ம பூஷண் விருதும், நடிகர் கோட்டா சீனிவாச ராவ், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.