பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும், கிரிக்கெட் வீரர் விராட் ஹோக்லியும் தீவிரமாக காதலித்து வருகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான், ஆனால் இப்போது அது விஷயம் அல்ல, உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் அரையிறுதி போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணியுடன் தோல்வியை தழுவி, உலககோப்பை போட்டியிலிருந்து வௌியேறியது. இந்திய அணி தோல்வி அடைந்ததில் இருந்து அனுஷ்கா சர்மாவையும், விராட் ஹோக்லியையும் சமூக வலைதளங்களில் கடுமையாக சாடி வருகின்றனர் ரசிகர்கள்...
இந்நிலையில், அனுஷ்கா சர்மா வீட்டில் கல் எறியுங்கள் என்று ரசிகர்களை தூண்டுவதோடு தனது ஆவேசத்தையும் கொட்டி தீர்த்துள்ளார் இந்தி நடிகர் கமல் ரஷித்கான்.
இதுகுறித்து கமல் ரஷித்கான் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, விராட் ஹோக்லி சரியாக ஆடாததற்கு அனுஷ்கா சர்மா சிட்னி போனது தான் காரணம், எனவே ரசிகர்கள் அவரது வீட்டின் மீது கல் எறியுங்கள், அவரது படங்களையும் புறக்கணியுங்கள் என்று கூறியுள்ளார்.
ரோம் நகரம் தீப்பிடித்து எரிந்தபோது நீரோ மன்னர் பிடில் வாசித்து கொண்டிருந்தாராம்... என்று ஒரு பழமொழி சொல்வார்களே... அதுபோல், ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை, ஹோக்லியையும், அனுஷ்காவையும் சமூக வலைதளங்களில் தீட்டி தீர்த்து வரும் வேளையில், இருவரும் ஜோடி சேர்ந்த படி ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா வந்து சேர்ந்தனர்.